டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு
Published on

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை 7.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில அதிர்வுகளை உணர்ந்தவுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. டெல்லி மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மற்றும் மேலும் சில வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com