
திருவனந்தபுரம்,
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் , அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரளா:
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) , பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
அசாம்:
126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
அசாம் தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
புதுச்சேரி:
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்காளம்:
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்க்கு 148 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என 3 முனை போட்டி நிலவுகிறது.