டெல்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லையில் போலீசார் குவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 81-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லையில் போலீசார் குவிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 81-வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் இன்று டெல்லி எல்லைப்பகுதிகளில் 81-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சாலைகளின் முள் வேலிகளுடன் கூடிய தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திக்ரி எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com