

மும்பை,
மராட்டிய மாநிலம், புனே ராவெட் பகுதியில் 24-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனவர்.
மராட்டிய மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த பெண் டாக்டர் சுவேதா ரொக்டே (வயது 29). இவர் புனே ராவெட் பகுதியில் தோழிகளுடன் தங்கி, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை, அருகிலுள்ள கட்டுமான அடுக்குமாடி குடியிருப்பின் 24-வது மாடிக்குச் சென்ற அவர், திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்தார்.
போலீசார் அவரது அறையில் சோதித்தபோது, "என் மரணத்திற்கு நானே பொறுப்பு" என எழுதியிருந்த கடிதம் சிக்கியது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.