ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி சாவு

விஜயநகரில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி சாவு
Published on

விஜயநகர்:

விஜயநகர் மாவட்டம் கூட்லிகி தாலுகாவில் உள்ள கிராமத்தில் போரய்யா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று மதியம் அவர் ஓட்டலில் உணவு சமைத்து கொண்டு இருந்தார். அப்போது ஓட்டலில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ ஓட்டல் முழுவதும் பரவி எரிந்தது. உடனே போரய்யா உள்பட 3 பேர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது, ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

இதில் 2 வாலிபர்கள் உடல் சிதறி பலியானாகள். போரய்யா காயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடகோட்டே போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து ஓட்டலில் பிடித்த தீயை அணைத்தாகள். போலீஸ் விசாரணையில், பலியான வாலிபர்கள் குடகோட்டே பகுதியை சேர்ந்த சிவப்பா (வயது 28), ஸ்ரீகாந்த் (23) என்று தெரிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com