தங்க கடத்தல் வழக்கு; கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
தங்க கடத்தல் வழக்கு; கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியன. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவரும், இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் பெங்களூருவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் சந்தீப் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் ஏற்கனவே கைதான ஷரித், மலப்புரத்தில் கைதான ரமீஸ் ஆகியேரும் கெச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் தமிழகம் வழியாக சாலைமார்க்கமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கெச்சிக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கொச்சி கலூர் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் எண் 2ல் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com