

கொல்கதா
தற்போது 0, 5, 12, 18 மற்றும் 28 என ஐந்து வகையான விகிதங்கள் அமலில் உள்ளன. ஜிஎஸ்டிக்கு முன்னர் 80 லட்சம் முகவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு 13.2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 56,000 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜிஎஸ்டி நெட்வொர்க்கைப் பொறுத்தவரை அது இன்னும் மேம்படுத்தப்படும் என்றார் அவர். பதிவு செய்துள்ள முகவர்கள் சில கடும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைப்பு சிறந்த முறையில்தான் இருக்கிறது என்றார் அமைச்சர்.
முகவர்கள் கணினி மயம் செய்யப்பட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இது உள்ளீட்டு வரிச் சலுகை மற்றும் மறு ஈட்டு கட்டண வழிமுறையையும் மேற்கொள்ள தேவைப்படும் என்றார் அவர்.
ஜிஎஸ்டி கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை தேவைப்படுகின்றன. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில் இச்சலுகை குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர்.
அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டதால்தான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பான்மை மாநிலங்கள் ஒப்புக்கொண்டன என்ற அடிப்படையில் அது கொண்டு வரப்படவில்லை. ஒரு மாநிலம் எதித்திருந்தாலும் கூட அது அமலுக்கு வந்திருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.