இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு... மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு... மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

சிம்லா,

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால் 330 மின் பகிர்மானப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கும், ஜனவரி 23 முதல் 26 வரையும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.   

X

Daily Thanthi
www.dailythanthi.com