

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடிய சம்பவம் நடந்த சூழல், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
பிரியங்கா ரெட்டி, கடந்த 27-ந் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்கு சென்றுள்ளார்.
இரவு 9 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பும்போது 2 சக்கர வாகனத்தை எடுப்பதற்காக சுங்கசாவடி சென்றால், அங்கே அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக் கண்டார்.