உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் மந்திரி பா.ஜனதாவில் சேர்ந்தார்

உத்தரபிரதேச மாநிலத்தில், சமாஜ்வாடி கட்சி முன்னாள் மந்திரி பா.ஜனதாவில் நேற்று இணைந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் மந்திரி பா.ஜனதாவில் சேர்ந்தார்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங் அரசில் மந்திரியாக இருந்தவரும், 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து தற்போது எம்.எல்.சி.யாக உள்ள சவுத்ரி வீரேந்திரசிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அவருடன் அவரது நெருங்கிய ஆதரவாளர்களான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மனிஷ் சவுகான், ஹர்மிந்தர் சவுகான் ஆகியோரும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

சவுத்ரி வீரேந்திரசிங் மேற்கு உத்தரபிரதேசத்தில் குஜ்ஜார் சமூகத்தின் முக்கிய தலைவராகவும் உள்ளார். இதன்மூலம் இந்த தேர்தலில் அந்த பகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com