ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது ஒரு கோழைத்தனமான, மன்னிக்க முடியாத வன்முறை என வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
Published on

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித்தாக்குதலில் 400 பேர் பலியானார்கள். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-

காபூலில் உள்ள போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழித்தாக்குதலை இந்தியா திட்டவட்டமாக கண்டிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையை போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தி இருப்பது பொதுமக்களின் உயிரை பறித்த ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறை செயலாகும். தற்போது பாகிஸ்தான் ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கை என சித்தரிக்க முயன்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com