குரங்கு அம்மை சிகிச்சைக்காக 3 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் - டெல்லி அரசு நடவடிக்கை

குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குரங்கு அம்மை சிகிச்சைக்காக 3 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் - டெல்லி அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இவரை தவிர கேரளாவில் மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தலைநகர் டெல்லியில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி குரங்கு அம்மை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் தலா 10 அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்களுக்காக 5 அறைகளையும், குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களுக்காக 5 அறைகளையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com