ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆதார் எண்ணுடன் பான்கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மற்றும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகிய இரண்டும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

2018-19 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com