மகா சிவராத்திரி: பூரி கடற்கரையில் சிவனின் மணல் சிற்பத்தை உருவாக்கிய நவீன் பட்நாயக்

சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.
மகா சிவராத்திரி: பூரி கடற்கரையில் சிவனின் மணல் சிற்பத்தை உருவாக்கிய நவீன் பட்நாயக்
Published on

பூரி,

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது. பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமிக்கத்தக்க மணல் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.

இந்த ஆண்டும் (2026) அவர் தனது கலைத்திறமையால் சிவபெருமானின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ளார். சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com