மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை தொடங்கப்பட்டது. அரசின் தடையை மீறி இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதயாத்திரை கனகபுரா, ராமநகர், பிடதி வழியாக பெங்களூருவுக்கு வர இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த பாதயாத்திரை 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்காலிகமாக ராமநகரில் முடித்து கொள்ளப்பட்டது.

மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பாதயாத்திரை வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், "மேகதாது பாதயாத்திரையை வருகிற 27-ந் தேதி ராமநகரில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த பாதயாத்திரையை பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் முடித்து கொள்ளப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com