நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை

நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

நெதர்லாந்து மன்னர் வில்லம்-அலெக்சாண்டரும், ராணி மேக்சிமாவும் 6 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். நேற்று டெல்லியில் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து பேசினார்.

மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் நெதர்லாந்து மன்னரும், ராணியும் செல்கிறன்றனர். வருகிற 17-ந் தேதி, மும்பையில் மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். கேரள மாநிலம் கொச்சியில் அவர்களுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விருந்து அளிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com