இமாச்சலபிரதேசத்தில் தீவிரமடையும் பருவமழை - 157 பேர் பலி

இமாச்சலபிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இமாச்சலபிரதேசத்தில் தீவிரமடையும் பருவமழை - 157 பேர் பலி
Published on

சிம்லா,

வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் கடந்த ஜுன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அம்மாநிலத்தின் சிம்லா, சம்பா, கங்ரா, மண்டி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

பருவமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

157 பேர் பலி

இந்நிலையில், இமாச்சலபிரேதேசத்தில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, விபத்து போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பருவமழையால் ரூ. 886 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com