ராணுவ வீரர்களை ஏமாற்றி துப்பாக்கிகளை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்

மத்தியபிரதேசத்தில் மர்ம நபர்கள் இருவர் ராணுவ வீரர்களை ஏமாற்றி துப்பாக்கிகளை தூக்கிச்சென்றனர்.
ராணுவ வீரர்களை ஏமாற்றி துப்பாக்கிகளை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம், ஹோசாங்காபாத் மாவட்டம் பச்மாரி என்ற இடத்தில் ராணுவ சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மர்மநபர்கள் சோதனைச்சாவடிக்கு சென்றனர். அங்கு இருந்த ராணுவ வீரர்களிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அவர்களது கவனத்தை திசை திருப்பி சோதனைச்சாவடியில் இருந்து 2 துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு இருவரும் தப்பிச்சென்றனர்.

உடனே இது தொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலை மற்றும் ரெயில் நிலையத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com