சிக்கமகளூருவில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி

சிக்கமகளூருவில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி நடைபெற்றது.
சிக்கமகளூருவில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி
Published on

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா முகலவள்ளி கிராமத்தில் நேற்றுமுன்தினம் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி நடந்தது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியானது 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் கார் பந்தயத்தை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் குவிந்தனர்.

அவர்கள் கார் பந்தயத்தை பார்த்து உற்சாகம் அடைந்தனர். போட்டியில் ஒருசில கார்கள் விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கார் பந்தய போட்டியை காண ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com