மும்பை தாராவியில் நேற்று புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை

தாராவியில் இந்த மாதத்தில் 5-வது நாளாக ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை.
மும்பை தாராவியில் நேற்று புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அங்கு கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தொற்று பாதிப்பு அதிகரித்தது. அதன்பிறகு அங்கு பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது அங்கு ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை பெறுவோரும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர்.

இதனால் தாராவி தொற்று இல்லாத பகுதியாக மாறி வருகிறது. இதில் நேற்று தாராவியில் ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை. இந்த மாதத்தில் 5-வது நாளாக அங்கு ஒருவர் கூட பாதிக்கப்படாமல் உள்ளனர். ஏற்கனவே கடந்த 3, 8, 11, 12 ஆகிய தேதிகளில் தாராவியில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாராவியில் இதுவரை 6 ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 596 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 11 பேர் மட்டுமே தாராவியில் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com