

புதுடெல்லி,
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர், தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற் காக மத்திய அரசு, வீட்டு உபயோக கியாஸ் நுகர்வோரை பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்துக்கு கட்டாயப்படுத்துகிறது. இந்த பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இது குறித்த தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தன இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
பலமுறை காலக்கெடுவையும் நீட்டித்தது. இந்த காலநீட்டிப்பின் பயனாக கடந்த 19-ந்தேதி நிலவரப்படி, 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோர். அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர், பயோமெட்ரிக் ஆதார் அங்கீகா ' ரத்தை முடித்து விட்டனர். இன்னும் 10 சதவீதம் பாக்கி உள்ளது. அவர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.வருகிற 1-ந் தேதிக்குள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காதவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் கிடையாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.