‘தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது’ - ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் பேச தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது’ - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10:30 மணியளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அவை கூடியபோது கடும் அமளி ஏற்பட்டதால், மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் விவாதத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும்போது, ​​அவர் அதற்குப் பதிலளிக்குமாறு கோருவது இயல்பான ஒன்றுதான். ஆனால், கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு பதிலளிக்க நான் எழுந்தபோது, ​​எனக்கு பேச அனுமதி அளிக்கப்படவில்லை. எனது மைக் அணைக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க நான் விரும்பினேன். தற்போது போராடி வரும் மாணவர்களுக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன: ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மற்றும் மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவைதான் அந்த மூன்று நிபந்தனைகள். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, நாங்கள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடப்போவதில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com