

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலே எடையுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அதனை பிடித்தனர். பின்னர் முறைப்படி அதன் நீளம் மற்றும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது. இதன்பின்னர் பத்திரமாக அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.