தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா: அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றம்

அமளிக்கு இடையே, மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026 விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம்
Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளியால் பாதிக்கப்பட்டு வருகிறது. 15-வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. மாணவர் போராட்டங்கள், நீட் தேர்வு விவகாரம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின. தொடர்ந்து அமளி நீடித்ததால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மசோதா நிறைவேற்றம்

அமளிக்கு இடையே, மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026 விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகளை விரைவாக வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

மாநிலங்களவை ஏற்கனவே இந்த மசோதாவை நிறைவேற்றியிருந்ததால், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதற்கு முன் மாநிலங்களவையில் ஒதுக்கீட்டு மசோதா, 2026 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த மசோதா மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து கூடுதல் செலவினங்களுக்கு ரூ.54,067 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com