மத்திய மந்திரி பியூஷ்கோயலின் தாயார் மரணம்

மத்திய மந்திரி பியூஷ்கோயலின் தாயார் நேற்று மரணம் அடைந்தார்.
மத்திய மந்திரி பியூஷ்கோயலின் தாயார் மரணம்
Published on

புனே,

மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலின் தாயார் சந்திரகாந்தா நேற்று மும்பையில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. பா.ஜனதா மூத்ததலைவரான இவர், மராட்டிய மாநிலம் மட்டுங்கா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சந்திரகாந்தாவின் கணவர் வேத்பிரகாஷ்கோயல் பா.ஜ.க. பொருளாளராக இருந்தவர். மேலும் வாஜ்பாய் மந்திரிசபையில் கப்பல் துறை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயார் மறைவையொட்டி பியூஷ் கோயலுக்கு, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதுபோல தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இரங்கல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com