இந்தியாவில் ஒரே நாளில் சாதனை: 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

இந்தியாவில் ஒரே நாளில் சாதனை அளவாக, 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் சாதனை: 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தாலும், அதில் இருந்து மீளுவோரின் எண்ணிக்கையும் அதற்கு ஏற்ப அதிகரிக்கிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் சாதனை அளவாக 53 ஆயிரத்து 879 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இதன்மூலம் இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைவோர் விகிதமும் 68.78 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

தற்போது நாட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்காக சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 6 ஆயிரத்து 535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com