வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் திருட்டு

உப்பள்ளியில், வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் திருட்டு
Published on

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி பாப்பிகார் சாலையில் சாந்தி நகரை சேர்ந்த ரிசப் தெலிசரா என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

இவர் ரிசப்பின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்து தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து ரிசப், நகைகளை சரி பாத்த போது அதில் 50 கிராம் எடையுள்ள ரூ.2.70 லட்சம் மதிப்பிலான தங்க நகை காணாமல் பாய் இருந்தது.

இதையடுத்து அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பாத்த போது, கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்தவர் தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com