எஸ்.400 ஏவுகணை அமைப்புகளை இந்தியாவுக்கு விநியோகிக்க தொடங்கியது ரஷ்யா

எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
எஸ்.400 ஏவுகணை அமைப்புகளை இந்தியாவுக்கு விநியோகிக்க தொடங்கியது ரஷ்யா
Published on

புதுடெல்லி,

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதனால் முதல் கட்டமாக 800 -மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் 2019-லேயே கொடுத்துவிட்டது. ஆனால் இன்னும் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில், திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ் 400- ஏவுகணை அமைப்புகளை விநியோகிக்கும் பணி தொடங்கியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com