கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படும் - முதல்-மந்திரி அறிவிப்பு

ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நாளை 10-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படும் - முதல்-மந்திரி அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் 14 ஆம் தேதி(நாளை) முதல் 10-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் இன்று அறிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிலைமையை கண்காணித்த பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்த பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com