மசூதிக்கு 900 சதுர அடி நிலத்தை நன்கொடையாக வழங்கிய சீக்கியர்

மசூதிக்கு 900 சதுர அடி நிலத்தை சீக்கியர் ஒருவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
மசூதிக்கு 900 சதுர அடி நிலத்தை நன்கொடையாக வழங்கிய சீக்கியர்
Published on

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புர்காசி நகரில் நேற்று முன்தினம் குருநானக் தேவ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் சுக்பால்சிங் பெடி (வயது 70) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள மசூதிக்கு தனக்கு சொந்தமான 900 சதுர அடி நிலத்தை தானமாக வழங்குவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து 900 சதுர அடி நிலத்திற்கான ஆவணங்களை பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் வழங்கினார். அவரது இந்த நடவடிக்கை சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக கருதி இரு சமூகங்களை சேர்ந்தவர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com