மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்

மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 21.89 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி இதில் 19 கோடியே 93 லட்சத்து 39 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மாநிலங்களிடமும், யூனியன்பிரதேசங்களிடமும் தற்போது 1 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகளை அடுத்த 3 நாளில் வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com