டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள், எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களையும் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

2-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ கலந்து கொண்டார்.

மேலும் இதில், நாடாளுமன்ற எம்.பி.க்களான திருமாவளவன், ஜோதிமணி, செல்லக்குமார், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன் மற்றும் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com