ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பியதால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடர்ந்த நிலையில், தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கனே 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com