கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி

கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதியை இந்திய ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதி
Published on

புதுடெல்லி,

குளிரூட்டப்பட்ட அறைகளில் கொரோனா வேகமாக பரவும் என கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே கொரோனா பரவாமல் தடுக்க ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் புதிய வசதியை இந்திய ரெயில்வே மேற்கொண்டு உள்ளது.

அதாவது தற்போதைய நிலையில் ரெயில்களின் ஏ.சி. எந்திரங்கள் மணிக்கு 6 முதல் 8 முறையே புதிய காற்றை உள்ளிழுக்கிறது. இதன் மூலம் 20 சதவீத அளவுக்கே புதிய காற்று பெட்டிக்குள் கிடைக்கிறது. மீதமுள்ள காற்று மறுசுழற்சி செய்யப்பட்டதாகவே இருந்து வருகிறது. இதனால் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இனிமேல் மணிக்கு 16 முதல் 18 முறை புதிய காற்றை உள்ளிழுக்கும் எந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த புதிய நடைமுறை கடந்த மாதம் 12-ந்தேதி முதல் ராஜ்தானி தடங்களில் 15 இணை ரெயில்களில் பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. இது இனிமேல் அனைத்து ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை பயன்படுத்தும்போது அது விரைவில் குளிரூட்டப்படும். ஆனால் அடிக்கடி புதிய காற்றை குளிரூட்டுவதற்கு 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே இந்த புதிய நடைமுறையால் ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் அதிகரிக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com