"மக்களிடம் போக்குவரத்து காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது" - குஜராத் மந்திரி ஹர்ஷ் சங்கவி

தீபாவளியை முன்னிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அபராதம் வசூலிக்காது என குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரை மக்களிடம் போக்குவரத்து காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது என அறிவித்துள்ளது.

இந்த சலுகை, தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டது என்றும், இதனால் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குறிப்பிட்ட இந்த நாட்களில் போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அபராதம் வசூலிக்காது என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com