உத்தரபிரதேசம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அயோத்தி,

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது.

அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com