விஜயவாடா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை

மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் நிதியினை அளித்துள்ளார்.
விஜயவாடா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை
Published on

விஜயவாடா,

ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு முன்பு திடீர் கனமழை கொட்டியது. தொடர்ந்து மழையால், பெய்த முக்கிய சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களுக்குள் மழை நீர் புகுந்ததால், பஸ் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நூற்றூக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு அம்மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ.1 கோடி நிவாரணம் அளித்துள்ளார். மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் நிதியினை அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com