டிரம்ப்பிடம் பேசியது என்ன? - பிரதமர் மோடி பதிவு

பிரதமர் மோடி - டிரம்ப் இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
டிரம்ப்பிடம் பேசியது என்ன? - பிரதமர் மோடி பதிவு
Published on

புதுடெல்லி,

ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். டிரம்ப்பிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம். மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானித்தோம். மேற்கு ஆசிய போர்ச்சூழல் பற்றியும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com