நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை - நேதாஜியின் மகள் அனிதா போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 77வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை - நேதாஜியின் மகள் அனிதா போஸ்
Published on

புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 77வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ்-பாப், ரெங்கோஜி கோவிலில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று கூறினார்.

சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் இருந்து விமானத்தில் ஏறினார். ஆனால் பல்வேறு தரவுகளின்படி, அது புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது, இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.

இன்று அவருடைய நினைவு நாளாக கருதப்படுகிறது. ஆனால் இந்த விபத்தில் அவர் உயிர் பிழைத்ததாக பலர் நம்புகின்றனர்.

ஆஸ்திரியாவில் பிறந்த பொருளாதார நிபுணர் அனிதா போஸ்-பாப் என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் ஆவார்.இதுகுறித்து அனிதா போஸ் கூறுகையில்:-

"எனது தந்தையின் அஸ்தியின் டிஎன்ஏ சோதனை குறித்து இந்திய அரசை அணுகுவேன்.நான் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். டிஎன்ஏ சோதனை இந்த சந்தேக கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எனது நிலைப்பாட்டை பொது மக்களை அணுகுவேன்.

இது குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேச முடியவில்லை. பிரதமரிடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைவேன்.

முதலில் ரெங்கோஜி கோவில் நிர்வாகத்திற்கு இது பிடிக்குமா பிடிக்காதா என்று தயங்கினேன். ஆனால் இப்போது நான் சோதனை நடத்த தயாராக இருக்கிறேன்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com