குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்
Published on

மங்களூரு:

கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கெம்மிஞ்சே கிராமத்தை சேர்ந்தவர் நிங்கனகவுடா. இவரது சகோதரர் மகாதேவப்பா. இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் மது அருந்தினர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் நிங்கனகவுடாவும், மகாதேவப்பாவும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும், கையில் கிடைத்த கட்டையை எடுத்து நிங்கனகவுடா, மகாதேவப்பாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மகாதேவப்பா சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து நிங்கனகவுடா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான மகாதேவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்-தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் நிங்கனகவுடா தனது தம்பி மகாதேவப்பாவை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நிங்கனகவுடாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com