ஆம் ஆத்மி சரியான திசையில் செல்லவில்லை: அன்னா ஹசாரே

ஜனநாயகத்தில் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு என்று அன்னா ஹசாரே கூறினார்.
ஆம் ஆத்மி சரியான திசையில் செல்லவில்லை: அன்னா ஹசாரே
Published on

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சத்தா தலைமையில் 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் அதிர்ச்சியை இந்த சம்பவம் கொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்ட இந்த பிளவு குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரா கூறியதாவது: ஜனநாயகத்தில் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு

அவர்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து கட்சித் தலைமை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அவர்கள் ஏதோ சிரமத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். கட்சித் தலைமையின் தவறுதான் இதற்குக் காரணம். கட்சி சரியான திசையில் சென்றிருந்தால் அவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.

கட்சியை விட்டு விலகும் அவர்களின் முடிவுக்குப் பின்னால் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கும்.அந்தக் காரணங்களை பரந்த ஜனநாயக சூழலின் பின்னணியில் பார்க்க வேண்டும். எங்கிருந்து வெளியேற வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com