மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது.
Published on

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, புஷ்ப காவடி பறக்கும்காவடி நிகழ்ச்சிகள் கடந்த 17ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்செந்தூர் திருப்பணிக்குழு தலைவர் துளசி தலைமையில் நடந்தது.

நேற்றுமுன்தினம் காலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு வேல் தரித்தல், 7.30 மணிக்கு பூக்குழி இறங்குதல், 8 மணிக்கு காவடி பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம், 10 மணிக்கு காவடி அலங்காரம் நடந்தது.

பறக்கும்காவடி

நேற்று காலை 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று, அங்கு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு செண்டை மேளமும், மாலை 4 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து பறக்கும் காவடி, புஷ்ப காவடி வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூரை சென்றடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com