விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
Published on

அரியலூர்,

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வதம்பி தலைமை தாங்கினார். மருதவாணன் முன்னிலை வகித்தார். சுதாகர் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் சேகுவாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவரிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனு அளித்தனர். கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கியதாசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com