கேரள தங்க கடத்தல்:4 மலையாள திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் பைனான்ஸ் செய்ததாக தகவல் வழியாக உள்ளது.
Published on

திருவனந்தபுரம்:

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே ஜூலை 24ம் தேதி இருவரது ஜாமீன் மனுவும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது

தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் சினிமா தொடர்பு அம்பலமாகியுள்ளது. கடத்தல் பணத்தைக் கொண்டு சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததாக பரீத் தகவல் வெளியாகியுள்ளது. 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக பைசல் பரீத் கூறியுள்ளார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com