மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நேற்று முன்தினம் ஒருவர் நுழைந்தார். எம்.பி. என்று கூறிக்கொண்டு அவர் அங்குள்ள நூலகத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால், வரவேற்பறையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

முழுமையான பரிசோதனைக்கு பிறகு அவர் கூறியது பொய் என்று தெரிய வந்தது. அவர் பெயர் வருண் மாத்தூர் ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்திலும், அதைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com