சென்னை
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டமானாலும் அதனை தமிழக அரசு எதிர்க்கும் .
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை . சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.