கண்டமங்கலம் அருகே பெண் மர்ம சாவு

கண்டமங்கலம் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார்.
Published on

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்தவர் குப்புசாமி மகள் குஷ்புலதா (வயது 35). இவரை விக்கிரவாண்டி தாலுகா கொடுக்கூரை சேர்ந்த சிலம்பரசன் (40) என்பவருக்கு கடந்த 12.4.2018 அன்று திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் யாஷ்மின் என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் சிலம்பரசன் தனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் சிலம்பரசன், தனது மனைவியின் சகோதரர் முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு குஷ்புலதா சேலையால் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குஷ்புலதாவின் பெற்றோர், கொடுக்கூருக்கு விரைந்துசென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து குஷ்புலதாவின் தாய் செல்வி, கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குஷ்புலதாவின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com