பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த மேட்டுகாலனி, புதிய காலனி, முஸ்லிம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை பெரியபாளையம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com