

அந்த பொழுதுபோக்கு பூங்கா முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து திருக்கோவிலின் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபுஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொழுதுபோக்கு பூங்காவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பொழுதுபோக்கு பூங்கா ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.