கும்பகோணம் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு காரைக்காலில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை

கும்பகோணம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்ததாக காரைக்காலை சேர்ந்தவரின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கும்பகோணம் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு காரைக்காலில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை
Published on

காரைக்கால்,

கும்பகோணம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டை சேர்ந்தவர் பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம். இவர் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருவிடைமருதூர் போலீசார் திருபுவனம் சர்புதீன் (வயது 60) முகமது ரியாஸ்(27), திருமங்கலக்குடி நிஜாம் அலி(33), முகமது பர்வீஸ்(26), முகமது தவ்பீக்(29) உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, காரைக்கால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது அசன் குத்தூஸ் (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் தேசிய அளவில் குற்றவாளிகள் செயல்பட்டிருப்பதால், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com